செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஒரு குழந்தை பாடும் தாலாட்டு

இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்
வடம் இழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

வெரும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
வெரும் நாறில் கை கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வாணத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாள் தோறும் வாழ்கிறேன்

உளம் அறிந்த பின் தானே அவளை நான் நினைத்தது
உறவுருவாள் என தானே மனதை நான் கொடுத்தது
உயிரில்லாத கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது?

1 கருத்து: