சனி, 28 பிப்ரவரி, 2009

Badam Kheer


தேவையானவை:


Almonds 12 tblsps.
Milk 2 cups
Sugar 8 tblsps.
Cardamom(powdered) As required
Saffron A pinch


செய்முறை:


1.Take some hot water and soak the almonds in it for some hours.
2.Then peel and slice the almonds.
3.In a saucepan, heat milk, add sugar and boil till it thickens slightly.
4.Add the remaining ingredients and cook for a little time.
5.Take off from the flame.
6.Serve hot with puris.

வியாழன், 26 பிப்ரவரி, 2009

வாழைக்காய் மசாலா தயிர் கூட்டு

தேவையானவை:
முற்றிய மொந்தன் வாழைக்காய் -- 3
கெட்டி தயிர் -- 400 கிராம்
பச்சை மிளகாய் -- 8 (காம்பு நீக்கி கீறிக்கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 10 (தோல் நீக்கி வட்டத்தில் அரிந்து கொள்ளவும்)
உப்பு -- தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவியது -- 1/2 மூடி

பூண்டு -- 6 பல்
முந்திரி பருப்பு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பட்டை -- 1 சிறிய துண்டு
ஜாதிக்காய் -- 1 சிறிய துண்டு
மிளகாய் பொடி -- 1 டேபிள் ஸ்பூன்
மல்லி பொடி -- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி -- 1 டீ ஸ்பூன்
தாளிக்க
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை -- 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை -- 1 கொத்து
நெய் -- 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -- 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காய்களை அடியும் நுனியும் வெட்டி குக்கரில் ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்து தோல் உரித்து
சின்ன சின்ன துண்டுகளாக்கவும்

அரைக்க கொடுத்துள்ள எல்லாவற்றையும் நன்கு மைபோல் அரைத்து தயிருடன் கலந்து கொள்ளவும்

வானலி வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவையை தாளித்து பின் அதில் பச்சை
மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரிந்து வைத்துள்ள வாழைக்காய் சேர்த்து
வதக்கவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலா தயிரை சேர்த்து 100 மில்லி தண்ணிர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு
இறக்குங்கள்

வித்தியாசமான சுவையுடன் கூடிய வாழைக்காய் கூட்டு தயார்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

சமையல் - Coconut Curd Chutney


தேவையானவை:

Fresh coconut ½ no.
Curd/Yogurt ½ cup
Red chilies 2-3 nos.
Mustard seeds ½ tsp.
Black Gram dal ½ tsp.
Oil 1 tsp.
Salt As per taste


செய்முறை:

1. Heat oil, add dal, chilies, and mustard seeds.
2. As soon as the seeds splutter, remove from fire.
3. Shred coconut and grind it with salt and the fried ingredients.
4. Add Curd/Yogurt and mix well.
5. This chutney should be consumed preferably on the same day.

Time Management

Thirteen Timely Tips for More Effective Personal Time Management

1. Spend Time for Planning And Organizing.
2. Set Goals
3. Prioritize
4. Use A To Do List
5. Be Flexible.
6. Consider Your Biological Prime Time.
7. Do The Right Thing Right.
8. Eliminate The Urgent.
9. Practice The Art Of Intelligent Neglect.
10. Avoid Being A Perfectionist.
11. Conquer Procrastination
12. Learn To Say "No"
13. Reward Yourself.

உடல் எடை குறைய

1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.

6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.

7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

9) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

10)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

11)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

12)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.

13)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

14)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

15)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.

இந்த குறிப்புகள் அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்

How to fight aging

Did you know that just walking for 30 minutes, 3 or 4 times a
week is enough to combat aging?

According to researchers at the University of California, one of
the principle causes of deterioration of the human organism’s physical
faculties is its diminished ability to metabolize glucose. And they
showed that even leisurely exercise, like taking a walk, plays an
important role in keeping glucose metabolism functioning smoothly.

Do you spend the whole day sitting at your desk or in front of a
computer screen? Why not get up occasionally and do a few minutes
of physical exercise? Don’t worry about what other people think.

In some Japanese companies, it is even become a collective
habit. Every twenty minutes a bell sounds, and everybody gets up to
do some stretching exercises, after which they sit down again as if
nothing had happened. Japanese managers are convinced that their
employees are more productive when they are relaxed.

பிடித்த தாலாட்டு

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட

(இந்தப்)

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)

சமையல் - Special Vadai

சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும்?

திங்கள், 23 பிப்ரவரி, 2009

Know Your VALUE....!

A well-known speaker started off his seminar by holding up a
Rupee 500 note.

In the room of 200, he asked, "Who would like this Rupee 500 note?"

Hands started going up. He said, "I am going to give this note to one of
you but first let me do this."
He proceeded to crumple the note up.

He then asked, "Who still wants it?"

Still the hands were up in the air.

"Well," he replied, "What if I do this?" And he dropped it on the ground
and started to grind it into the floor with his shoe. He picked it up, now
all crumpled and dirty. "Now who still wants it?"
Still the hands went into the air.

"My friends, you have all learned a very valuable lesson.
No matter what I did to the money, you still wanted it
because it did not decrease in value.
It was still worth Rupee 500/-.

Many times in our lives, we are dropped, crumpled, and ground into the
dirt by the decisions we make and the circumstances that come our way.
We feel as though we are worthless.

But no matter what has happened or what will happen,
you will never lose your value.

You are special. Don't ever forget it!
Never let yesterday's disappointments
overshadow tomorrow's dreams.

" VALUE HAS A VALUE ONLY IF ITS VALUE IS VALUED"

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எது அழகு?


கண்ணுக்கு மை அழகுதான் - ஆனால்
பெண்ணுக்கு பெண்’மை’ தான் அழகு!
கவிதைக்கு பொய் அழகுதான் - ஆனால்
காதலுக்கு மெய்தான் அழ்கு!

எல்லோருக்கும் இளமை அழகுதான் - ஆனால்

எப்போதும் திறமைதான் அழகு!
வல்லவனுக்கு வலிமை அழகுதான் - ஆனால்
நல்லவனுக்கு பொறுமைதான் அழகு!

கவர்ச்சிக்கு புதுமை அழகுதான் - ஆனால்
காட்சிக்கு எளிமைதான் அழகு!
வாழ்க்கைக்கு வளமை அழகுதான் - ஆனால்
வறுமையிலும் நேர்மைதான் அழகு!

-- எப்பவோ படித்தது.

சமையல் - Fish 55


நான் இன்னும் முயற்சி செய்யவில்லை. Best Wishes ***

தமிழ் - எழுத்துருக்களின் பயணம்

ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

- நன்றி வலைதள நண்பர்கள்.

மகரிஷி - வார்த்தைகள்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

சமையல் - மஷ்ரூம் சூப்

தேவையானவை: மீடியம் சைஸ் மஷ்ரூம் - 3. எண்ணெய் - அரை டீஸ்பூன். மைதா - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது - கால் டீஸ்பூன். மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன். சோள மாவு - 2 டீஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: மஷ்ரூமைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சோள மாவு, மிளகுத் தூளைத் தனித்தனியே சிறிது தண்ணீரில் கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு மைதா மாவைப் போட்டு வறுத்து, மூன்று கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய மஷ்ரூமைப் போட்டு, நன்றாக வெந்ததும் கரைத்த சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்!

பின் குறிப்பு: இது விகடன் ல் சுட்டது.

சனி, 21 பிப்ரவரி, 2009

சமையல் - கடலை சட்டினி

இது எனது முதல் பதிவு. முதலில் சமையலில் இருந்து ஆரம்பிப்போம்.

நிலக் கடலை சட்டினி.

தேவையானவை:
கடலை - ஒரு கப்.
சிவப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு.
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
பூண்டு - 2 பல்லு

செய்முறை:
கடலையை நன்கு சிவக்க வருத்து கொள்ளவும். தோல் எடுத்து, அதனுடன் மற்ற பொருட்கள்
போட்டு அரைத்து கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

சுவையான நிலக்கடலை சட்டினி ரெடி.

My Info


Hai,
Welcome to Meghamae blog.
I am Megha Makesh. I want to share my thoughts with you.
Catch u later.
-Megha