செவ்வாய், 31 மார்ச், 2009

காற்றில் வரும் கீதமே


காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிர்க்கு..உ உ உ அ அ ...............
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை அன்றே
அதுக்கேட்ற லயம் எந்தன் தந்தை அன்பே
சுருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உருவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இது போல் இல்லம் எது சொல்லு தோழி...

ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
நி நி ரி க ரி க ம த ம த ம
த நி ச நி நி ச நி நி ச
ச ச நி நி ச நி த நி நி நி
த ச நி த ம த
ச ச நி நி ச நி த நி நி
நி த ச நி த ம த
த த நி ம ம த க க
ம த ச நி த ம க ரி

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா



பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ, பால் - அரை லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய் - 6, முந்திரி பருப்பு - 10, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து, அதை சீடை அளவில் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளைப் போடவும். வெந்ததும் வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரில் பாலை சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் வேக வைத்த கொழுக்கட்டை, பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

திங்கள், 30 மார்ச், 2009

அச்சமில்லை ....

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1

கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2


-- பாரதியார்.

காக்கைச் சிறகினிலே...

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா; 1

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா; 2


கேட்கு மொழியிலெல்லாம்
நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா; 3

தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா - நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா. 4

--பாரதியார்.

Interesting Facts of English Counting

Letters 'a', 'b', 'c ' & 'd' do not appear anywhere in the spellings of 1 to 99

Letter 'd' comes for the first time in Hundred

Letters 'a', 'b' & 'c ' do not appear anywhere in the spellings of 1 to 999

Letter 'a' comes for the first time in Thousand

Letters 'b' & 'c' do not appear anywhere in the spellings of 1 to 999,999,999

Letter 'b' comes for the first time in Billion

And

Letter 'c' does not appear anywhere in in the spellings of entire English Counting

ஞாயிறு, 29 மார்ச், 2009

அறிமுகம் - புதிய வலைப்பதிவு

அன்பு வாசகர்களுக்கு,

புதிதாக, www.meghamaze.blogspot.com ( megha amaze என்பதன் சுருக்கம்) என்ற வலைப்பதிவு ஆரம்பித்து இருக்கிறேன். இது கண் பற்றிய பதிவு. படித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
Megha Makesh

வியாழன், 26 மார்ச், 2009

நெட் இணைப்பின்றி பிரவுசிங்...

நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி.

உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும்.

இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில் சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்யலாம்.

பேஜ்நெஸ்ட் டாட் காம் (http://pagenest.com/) இது ஒரு இலவச ஆஃப் லைன் பிரவுசர். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த இணையதளத்தின் பக்கங்களை காப்பி செய்து ஹார்டு டிஸ்கில் ஏற்றிக் கொள்ளலாம்.

பேஜ்நெஸ்டில் இணையதள முகவரி ஒன்றை அளியுங்கள் அது அந்த இணையதளம் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ உங்கள் ஹார்டு டிஸ்கில் பதிவிறக்கம் செய்து விடும். அப்படியே அந்த இணையதளத்தில் ஆன்லைனில் என்ன கண்டீர்களோ அது அப்படியே டெக்ஸ்ட், இமேஜஸ், எச்.டி.எம்.எல் அனைத்தையும் அப்படியே அச்சு அசலாகக் காட்டும்.


பேஜ்நெஸ்ட் மூலம் 40 கோப்புகள் வரை டவுன்லோடு செய்ய முடியும். விரைவில் டவுன்லோடு செய்தும் முடித்து விடலாம். இதில் பல சிறப்பம்சங்களும் உள்ளன.

சமீபத்திய டவுன்லோடுகள் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கிளிக் செய்யலாம். ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்த பல்வேறு இணையதளங்களுக்கு செல்லும் வசதியும் உள்ளது. மேலும் இதற்காக நீங்கள் எந்த செட்டிங்கையும் மாற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேஜ்நெஸ்ட் பிரவுசர் மூலமும் நீங்கள் பிரவுஸ் செயலாம். மேலும் டவுன்லோடு செய்த இணையதளக் கோப்புகளை காப்பி செய்து நீங்கள் லேப்-டாப்பிலும் வைத்துக் கொள்ளலாம் எனவே நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை வாசிக்கலாம். இதனை விண்டோஸ் விஸ்தா, எக்ஸ்பி-2000, எம்.இ மற்றும் 98 ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும்.

இதே போல் http://www.httrack.com/ மற்றும் http://www.spadixbd.com/backstreet/ ஆகிய இணையதளங்களும் உள்ளன. இந்த இணையதளங்களை மட்டுமே ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் பயன்படுத்தி நீங்கள் வழக்கமாக பார்க்கும் இணையதளங்களை டவுன் லோடு செய்தால் இன்டர்நெட் இணைப்பு பற்றிய பிரச்சினைகளும் இல்லை, செலவும் பெருமளவு குறையும

புதன், 25 மார்ச், 2009

அர்த்தமே வேறுதான்!







நன்றி - விகடன்.

50 - வது பதிவு


இது எமது 50 வது பதிவு.



விளையாட்டாக ஆரம்பித்த எமது பதிவிற்க்கு ஆதரவு தந்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

என்றொன்றும் உங்கள் ஆதரவுடன்,

உங்கள்

......... Megha Makesh ...........


ஞாயிறு, 22 மார்ச், 2009

20 - 20 For Ladies

உடல் அழகிற்கு சரும அழகு முக்கியம். அதற்கான 20 அசத்தல் ஆலோசனைகள்

* - ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* - பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட்ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

* - சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

* - மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* - பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* - அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* - வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் ‘ஷவரில்’ நிற்பது சருமத்திற்கு நல்லது.குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத்தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மேது துண்டை ஒற்றி எடுகக வேண்டும்.

* - வைட்டமின் ‘எ’ மற்றும் ‘சி’ அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

* - கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* - பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் ‘பிளீச்’ செய்யலாம்.

* - வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

* - கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்கு தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.

* - கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள்.

* - ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* - உடலில் ‘ஃபுளோரின்’ பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் ‘ஃபுளோரின்’ சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* - ‘சோடியம்’ பற்றாக்குறையால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் சருமம் பிசுபிசுவென்றுஆகிறது. வெள்ளரிக்காய்க்கு ‘சோடியம்’ பற்றாக்குறையை தடுக்கும் சக்தி உண்டு. மேலும், கோடைகால்த்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் ஜில்லென்று குளுமையாகி விடுகிறது.

* - சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது ‘சிலிக்கான்’ பற்றாக் குரையின் அறிகுறியாகும்.பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.

* - பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.

* - நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும்.

சனி, 21 மார்ச், 2009

வினிகர்

பொடுகுக்கு
தலையில் பொடுகால் அவதிப்படுபவர்கள், ஒரு தேக்கரண்டி வினிகரில் 3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து, சிறிது சூடு பண்ணி தலையில் மசாஜ் செய்து, 15 நிமிடங்களுக்கு பின் குளித்தால் பொடுகு தொல்லை குறையும். வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் தெரியும்.


for Baby - Pamper rash போக

குழந்தையை குளிப்பாட்டியபின் சிறிது நேரம் வினிகர் ஊற்றிய(2 ஸ்பூன்) தண்ணீரில் உட்கார வைத்தால் rash வராது.

ஜன்னல் பளபளக்க:

ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் கொண்டு துடைக்கவும்.

பாத்திரம் கழுவும்போது:

எதாவது பாட்டிலில் பாதியளவு தண்ணீர், பாதியளவு வினிகர் கலந்து பாத்திரம் கழுவ்வ பயன்படுத்தவும்.

குக்கரில் துர்நாற்றதை போக்க:
டம்ளர். குக்கர், பிளஸ்க் கறையாகவும், துர்நாற்றம் அடிக்கும் இதை போக்க வினிகர் கலந்து கழுவவும்.

பித்தாளை பாத்திரங்கள் பளபளக்க:

ஒரு பங்கு வினிகர் 5பங்கு தண்ணீர் கலந்து சுத்தம் செய்யவும்.

பெயின்ட் கரை போக்க:கண்ணாடிகளின் உள்ள பெயிண்டை போக்க சூடான வினிகர் கலந்து துடைக்கவும்.

மைக்ரோ ஓவனின் வாடை போக்க:

இறைச்சி செய்த பின்பு வரும் வாடையினை போக்க ஒரு கப்பில் சிறிது வினிகர் ஊற்றி 1 நிமிடம் ஹையில் வைத்து ஆப் செய்யவும்.

தரை பளபளக்க:

வீட்டின் தரைகளை சுத்தபடுத்தும் போது வினிகர் கலந்து துடைக்கவும்,

கேஸ் ஸ்ட்வ்வை சுத்தம் செய்ய

வினிக்ரை துணியில் ஊற்றி துடைக்கவும்.

பசை,கோந்து முதலியவை கட்டிவிட்டால் சிறிது வினிகரை கலந்து இறுக்கம் தளர்ந்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

வாஷ்பேசின் கறைகள் போக்குவதற்க்கு துணியில் வினிகர் முக்கி துடைத்தால் போதும்.

ஜன்னல் கண்ணாடியில் பெயின்ட் பட்டிருந்தால் வினிகர் சூடாக்கி தேய்க்கவும்

பிளாக் மேஜிக்

கூந்தல் "பிளாக் மேஜிக்"
*************************************

மருதாணி பவுடர் - 100 கிராம்
நெல்லி பவுடர் - 10 கிராம்
பிஞ்சு கடுக்காய் பவுடர் - 10 கிராம்

இவற்றுடன் 25 கிராம் டீ டிகாஷனை சேர்த்து, 1 எலுமிச்சம் பழத்தை பிழிந்து முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் தலையில் இந்த மாஸ்க் போட்டு நன்றாக காய்ந்ததும் அலசிவிடுங்கள் . வராம் ஒரு முறை இந்த மாஸ்க்கை தவறாமல் போட்டுப் பாருங்கள். கொங்ச நாளிலேயே இருக்கிறா நரைமுடிகள் பழுப்பு நிறத்துக்கு மாறி விடும். இந்த பழுப்பு நிறம் மெல்ல மெல்ல கறுப்பாக மாறிவிடும். மேலும் நரை கிட்ட நெருங்காமல் துரத்திவிடும்.

இதை போட நேரம் இல்லையா? ஒரு சுலப வழி

பிஞ்சு கடுக்காய்,நெல்லிக்காய்,கருவேப்பிலை மூன்றையும் ஒரே அளவில் எடுத்து கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

இறைச்சி சமைக்கும் போது

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது...

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

இறைச்சி மிருதுவாக இருக்க...

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதும்

கோழித் தோலை எளிதாக உரிக்க...

கோழித் தோலை உரிக்கும்முன் சிறிதளவுத் தோலை மட்டும் முதலில் உரித்து அதனை ஒரு பேப்பரால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளவும். தோல் தானாக பேப்பருடன் ஒட்டிக்கொள்ளும்.

கோழிக்கறி சமைக்கும்போது...

கோழிக்கறியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

கறியை விரைவாக சமைக்க

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.


வெள்ளி, 20 மார்ச், 2009

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

செவ்வாய், 17 மார்ச், 2009

Kathalithu Paar - Vairamuthu






ஐபாட், ஐபோன் இவற்றை டிவியுடன் இணைப்பது எப்படி?



நீங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பல்லூடகக் கையடக்கக் கருவியானது (Multimedia handhelds) அதற்கு உரிய சிறிய திரைக்கான வடிவமைப்பில் சிறந்ததே.

ஆனால் அதில் நீங்கள் ஏராளமான புகைப்படங்கள், காணொளிகள் (Video) போன்றவற்றைப் பதிந்து இருப்பீர்கள். சிறியதிரையில் பார்த்துப் பழகிய நமக்கு ஒரு மாறுதலுக்காக இந்தப் படங்களை, வீடியோக்களை பெரிய TV திரையில் நல்ல தரத்துடனும் காண்பதற்கான ஒரு கருவியைப் பற்றி இங்கே காணப்போகிறோம்

ஆரடி நீளமுள்ள ஒரு showTIME என்றழைக்கப்படக்கூடிய AV Cable தான் அது.

கார்களில் பயன்படுத்தக்கூடிய உயர்தரமான ஒலிக்கருவிகளைத் தயாரிப்பதில் முன்னனி வகிக்கும் Scosche நிறுவனம் சமீபத்தில் iPhone மற்றும் iPod Touchக்கான AV cableஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் iPhone, iPod போன்றவற்றின் ஒலி / ஒளியை TV யில் கண்டு / கேட்டு மகிழலாம்.

iPod touch Gen2, iPod nano Gen 4, iPod touch, iPod nano Gen3, iPhone, iPhone 3G and iPod with video போன்ற கருவிகளுடன் இந்த AV cable ஒத்திசைவு கொண்டுள்ளது.

உயர்தரமான கருவியாகவும், எந்தவிதமான திறனிழப்பும்(no signal loss) ஏற்படாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது

Schosche கடைகளில் இது 39.99$ மதிப்பில் கிடைக்கிறது.

முகவரி :

http://www.scosche.com/products/sfID1/210/sfID2/321/productID/1622

ஒளிக்களஞ்சியம் : I’m a PC - Microsoft வெளியிட்ட சமீபத்திய விளம்பரங்கள்

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு :
ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.

நீளமான இணைய முகவரிகளைச் சுருக்குவது எப்படி?

நம் நண்பர்கள் அனைவருமே இணையத்தளமோ (web site), வலைப்பதிவோ (blog) வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இணைய முகவரி (URL ) கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பதிவுகளுக்கும் தனித்தனி முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பதிவின் முகவரியைத் தொலைபேசியின் ஊடாக வேறு ஒரு நண்பருக்குத் தெரிவிக்க முயற்சித்தால் தகவல் இழப்புதான் நிகழும்.

ஏனெனில் பதிவின் முகவரி (URL for post address) மிக நீளமானதாகவும், தொலைபேசியின் அடுத்த முனையில் இருப்பவருக்குச் சிரமம் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

தொலைபேசி வாயிலாக ஒரு குறிப்பிட்ட பதிவின் முகவரியை எழுத்துப்பிழையில்லாமல் தெரிவிக்க இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.


குறிப்பிட்ட சில புக்மார்க் திரட்டிகளில் (book mark aggregators) ஏதேனும் காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட URL ஐ நிராகரித்திருப்பார்கள். அந்த URL ஐ அவர்களது Filter நுட்பம் வடிகட்டிவிடும்.

இந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்ட URL ஐ சுருக்கி வேறோரு URL ஆக மாற்றி அதை bookmark திரட்டிகளில் submit செய்யலாம். இது ஒரு காரணம். இது போல பல காரணங்கள்.

மிக நீளமான இணைய முகவரிக்குப் பதிலாக சிறிய முகவரியைப் பயன்படுத்தலாம். இதற்கு URL Redirection என்று பெயர்.

இந்தச் சேவையை வழங்குவதற்காக கீழ்க்கண்ட தளங்கள் உள்ளன.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2805

http://metamark.net/

http://notlong.com/

http://xaddr.com/

http://www.snipurl.com/site/index

http://doiop.com/

http://memurl.com/

http://shorl.com/

http://qurlyq.com/

http://is.gd/

http://traceurl.com/index.html?locale=en#t0

http://tinyurl.com

உதாரணம்:

http://snipurl.com/dkmwf இதைச் சொடுக்கினால், http://vijaybalajithecitizen.blogspot.com/2009/03/singh-is-king-cartoons.html இந்தப் பதிவிற்கு redirect ஆகும். முயற்சித்துப் பாருங்கள்.


http://xrl.us/bekjmm இதை சொடுக்கினால்,
http://www.meghamae.blogspot.com வரும்.

மைக்ரோவேவ் திரட்டு பால்

தேவையான பொருட்கள்
கண்டெண்ஸ்ட் மில்க் 1 டின்
தயிர் 1 தே.க
நெய் அல்லது பட்டர் 1 தே.க
ஏலதூள் 1/4 தே.க

செய்முறை
கண்டெண்ஸ்ட் மில்க், தயிர், நெய் அனைத்தையும் ஒரு மைக்ரோவேவ்
பாத்திரத்தில் போட்டு 2 நிமிடம் வைக்கவும்,

வெளியே எடுத்து மறுபடியும் 2 நிமிடம், வைக்கவும்,

மிண்டும் கிளறிவிட்டு 1 நிமிடம் வைக்கவும்.

கடைசியில் ஏலதுளை தூவி 50 செகண்ட்ஸ் வைக்கவும்.

ஐந்தே நிமிடத்தில் திரட்டுபால் ரெடி.

திங்கள், 16 மார்ச், 2009

கேரட் அல்வா - மைக்ரோவேவ்


தேவையான பொருட்கள்
காரட் துருவல்- 2 கப்
சீனி- 3 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர்- 5 டேபிள்ஸ்பூன்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி- 1 ஸ்பூன்

செய்முறை

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் காரட் துருவலையும் நெய்யையும் கலந்து 4 நிமிடம் HIGH-ல் சமைக்கவும். காரட் நன்கு மசிந்திருக்கும். இப்போது பால் பவுடர், சீனி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து மறுபடியும் 2 நிமிடங்கள் சமைக்கவும்.

Five Easy Ways to Prevent Carpal Tunnel Syndrome

Anyone who spends long hours at a keyboard is at risk for carpal tunnel syndrome, tendonitis and other Work Related Upper Extremity Disorders (WRUEDs). To lower your risk, lighten up.

1. Practice typing with a light touch. Post reminders where you can see them as you work.

2. Identify your "triggers." You may tend to type harder when you´re tired, hurried or under stress, for example. Pay extra attention to your keyboard force at those times.

3. Check you posture. Keep your wrists relaxed, but not bent upward or downward. Be sure your monitor is at eye level. Correct any problems that put you in an awkward posture.

4. Cut back on caffeine. "It´s just speculation," says Dr. Feuerstein, "but drinking too many caffeinated beverages could translate to increased tension that might relate to increased force when using the keyboard."

5. Listen to your body. Pain, aching, stiffness, burning, tingling, or numbing in your hands, wrists, arms or shoulders are "signals that something may not be right," says Dr. Feuerstein. See your doctor or an occupational physician, and you may avoid more serious injury later.

புதன், 11 மார்ச், 2009

குண்டாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா நீங்கள்?

* உண்ணும் உணவின் அளவை திட்டமிட்டு, ஒரு அட்டவணை தயாரித்து, அதன்படி உட்கொண்டால், உடல் எடையை நாளடைவில் குறைக்கலாம். நம் உடலுக்குள் செல்லும் உணவானது கலோரிகளாக மாற்றப்படுகிறது. கலோரி என்பது, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சக்தி. நாம் செலவிடும் சக்தியை விட உண்ணும் உணவு அதிகமாகும் போது, செலவிடப்படாத கலோரிகள் கொழுப் பாக மாறி, நம் உடலில் தங்கி விடுகிறது. எனவே, உடல் இளைக்க திட்டமிட்ட உணவை உண்டு, அதிகமாக உழைக்க வேண்டும்.


* வாரத்திற்கு ஒரு நாள், திரவ உணவை மட்டும் உட்கொள்ளலாம். தேவைப் பட்டால், பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அன்று சாப்பிடலாம்.


* கொழுப்புச் சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை விலக்க வேண்டும்.


* பகல் தூக்கத்தை கண்டிப்பாக விலக்க வேண்டும்.


* காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை அதிகம் போடக்கூடாது. சர்க்கரை இல்லாமல் அருந்துவது மிகவும் நல்லது. உடல் பருமனாக உள்ளவர்கள் இனிப்பு பதார்த் தங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.


* எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து இல்லாத எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.


* நொறுக்குத் தீனி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.


* உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.


* மற்ற உணவு வகைகளை விட கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மட்டுமின்றி, நீரிழிவு, இரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் கோதுமை ஏற்ற உணவு.


* கெட்டியான தயிரை விலக்கி, மோராக நீர்த்துச் சாப்பிடுவது நல்லது.


* இரவு வேளையில் திரவ உணவு உட் கொள்வது நல்லது. திட உணவை உட் கொண்டால், அதற்குப் பிறகு பால் அருந்துவது கூடாது.


* உறங்கச் செல்வதற்கு முன், பால் சாப் பிட்டால், பாலில் உள்ள கொழுப்பு சத்து அப்படியே தங்கி, உடல் எடையை அதிகப்படுத்தும்.



* வாழைத் தண்டை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்து வந்தால் உடல் எடை நாளடைவில் குறையும். வாழைத்தண்டு உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரைப் போக்குகிறது.


* தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தி வர, ஊளைச்சதை குறைந்து படிப்படியாக உடல் எடை குறையும்.


*ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன், பொறுக்கும் அள விற்கு சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிட்டால், உட் கொள்ளும் உணவின் அளவு குறைந்து படிப்படியாக உடல் எடை குறையும்.


*உணவுக் கட்டுப் பாட்டைத் தவிர, உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலை அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இதனால், உடல் எடை குறைவதுடன், புத்துணர்ச்சியும் ஏற்படும்.


* அதிகாலை திறந்த வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நீச்சல் பயிற்சி, சைக்கிள் பெடலிங், ஜாகிங் போன்றவை சிறந்த பலனளிக்கும்.


*பிராணாயாமம் அல்லது சுவாசப் பயிற்சியை முறைப்படிக் கற்று, தினமும் தவறாமல் செய்து வந்தால், தொந்தி விழுவதை தவிர்க்கலாம்.


முயன்றால் முடியாதது என்பது எதுவுமில்லை. எனவே, இவற்றை செய்து உங்கள் எடையை குறைக்க வாழ்த்துக்கள்.

Kitchen Tips - 2

* டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள்; டீயின் சுவை குறைந்து விடும்.

* கீரை மசியல் செய்ய, கீரையை கடையும் போது, அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய, கீரை தனி சுவையுடன் இருக் கும்.

* சாம்பார் மணக்க வேண்டுமா? சாம்பாரை இறக்குவதற்கு முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார் "கம... கம...'வென இருக்கும்.

* வெங்காயக் குழம்பு, புளிக்குழம்பு தயாரிக்கும் போது, கடுகுடன் சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும். வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

* சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள். வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.

* ரவா தோசை ஓட்டலில் கிடைப் பது போல் "மொறுமொறு'வென இருக்க வேண்டுமா? ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சுடவும்.

* ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக் கும்.

* ரஸ்க் அல்லது ட்ரை பிரட்டை மிக்சியில் நன்றாகப் பொடி செய்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுவல், கிரேவி போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால், ரொட்டித்தூள் சிறிது தூவி அதிகப்படி உப்பை சரிகட்டி விடலாம். சாதாரணமாகவே, வறுவல், கிரேவி போன்றவற்றிற்கு சுவை கூட்ட இந்த வறுத்த ரொட்டித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.

சுகமான தூக்கத்திற்கு...

* தூங்கும் போது தலைக்கு இரண்டு தலையணை வைத்துக் கொள்ளாதீர்கள். முதலில் சுகமாய் இருக்கும் காலப்போக்கில் கழுத்து வலி நிச்சயம்.

* தலையணையே வைக்காமல் படுப்பது நல்லது. மூளைக்கு ரத்தம் சீராகச் செல்லும். கழுத்து வலியும் ஏற்படாது.

* பழகியாச்சே என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதிக உயரம் இல்லாத மெலிதான தலையணை வைத்துக் கொண்டு தூங்கப் பழகுங்கள்.

* அடுத்தது படுக்கை விஷயம். மிருதுவான மெத்தை நல்லது அல்ல. கடினமான மெத்தையே முதுகுக்கு நல்லது.

Kitchen Tips -1

நம் முன்னோர், உணவே மருந்தாக இருக்கும் வகையில் சமையல் செய்தனர். அதனால் தான் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர். தனியே மருந்து என எதுவும் அவர்களுக்கு தேவைப்பட வில்லை. இங்கு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் கொடுக்கப் பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்தினால், நாமும் மருத்துவர்களை நாட வேண்டியதில்லை என்பது நிச்சயம்.


பூண்டு: பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டிற்கு கபத்தை வெளிக்கொணரும் தன்மை உள்ளது. இது, ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற பொதுவான நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. நோய் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது பூண்டு. இது, வாய் மற்றும் பல் ஈறுகளுக்கு மிகவும் நல்லது.


தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. அது மட்டுமின்றி, உணவிலும் சிறிது பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதால், பல் ஈறுகளில் நோய்த் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும், பல்களில் ஏதேனும் அடர்ந்த கறைகள் படிந்திருந்தாலும், அவற்றைப் போக்குவதற்காக கடுமையாக பல் துலக்கக்கூடாது.


கேரட்: கேரட்டில் புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-பி மற்றும் இரும்பு சத்து ஆகியவை காணப்படுகிறது. கண் தொடர் பான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க கேரட் சாப்பிடுவது நல்லது. கேரட்டை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். மேலும், கேரட்டை பச்சையாக கடித்து உண்பதால் பல் ஈறு பலப்படுகிறது. தினமும் கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டால், ஒருவருக்குத் தேவையான கால்சியம் சத்தை எளிதில் பெற முடியும். அது மட்டுமல்லாமல், குறைந்த எடையுடைய குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கவும் கேரட் உதவுகிறது.


தக்காளி: தினமும் ஒரு டம்ளர் தக்காளிச் சாறு குடித்தால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது; இது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தக்காளியில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் லைக் கோபீன் போன்ற ரசாயனங் கள், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், புற்றுநோய் செல்கள் உருவாவதை எதிர்த்து போராடவும் உதவுகிறது. தக்காளி, வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவற்றை உடலுக்கு அளிக்கிறது.


ஒரு சாதாரண மனிதனுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்-சி சத்தில் பாதியை, ஒரு நடுத்தர அளவிலான தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கிறது. ஸ்ட்ரோக் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதையும் தக்காளி தடுக்கிறது. ஒரு நடுத்தர தக்காளியில் 20 கலோரிகள் மட்டுமே காணப்படுகிறது.நன்கு சிவந்த தக்காளிகளைப் பயன்படுத்துவதே நல்லது. அதிக சிவப்பு நிறத்திலான தக்காளியில் தான், அதிகளவில் பீட்டா கரோட்டின் மற்றும் லைக்கோபீன் காணப்படுகிறது. தக்காளியை குறைந்த அளவிலான எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

பார்லர் போகாமலேயே பளிச்சிட வேண்டுமா?

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும்.பின் அந்த கலவையை, வெயில் அதிகமாக படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் ரசாயனங்களால், அந்த சமயத்துக்கு நல்லாயிருந்தாலும், நாள்பட முக அழகு கெட்டுவிடும் என்று எண்ணுபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும்.
இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...

எண்ணெய் சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

மூன்று டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும். இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும். இந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது.

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்


முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.


ஒளிரும் சருமம் வேண்டுமா...


50 கிராம் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை எசன்ஷியல் ஆயில் சேர்த்து, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென ஒளிரும். ஒளிரும் சருமத்திற்கான இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் தோல் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும். இவ்வகை மாஸ்க் அடிக்கடி முகத்தில் பூசினால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.


பீட்ரூட் அல்வா

பீட்ரூட் அல்வாவினை பலமுறைகளில் செய்யலாம். பீட்ரூட்டைத் துருவி, பாலுடன் வேகவைத்து சீனி கலந்து செய்வது பொதுவான முறை. பீட்ரூட்டை அரைத்து ரவை சேர்த்து செய்வது மற்றொரு முறை. இது தூள் சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்யப்படும் எளியமுறை பீட்ரூட் அல்வா.

தேவையானப் பொருட்கள்
பீட்ரூட் ஜூஸ் - 2 கப்
தூள் சர்க்கரை - 1 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 8

ஒரு பீட்ரூடை தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து ஜூஸ் எடுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

ஜூஸை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தூள் சர்க்கரை சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

கொதித்து நுரைத்து வரும் போது, கசடாக இருந்தால் அதனை சாரணி கொண்டு எடுத்து விடவும்.

கொதிக்கும் பொது பொட்டுகடலை பொடியை சிறிது சிறிதாக தூவி கட்டிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

தீயின் அளவினை சற்று அதிகம் வைத்து விடாது கிளறவும்.

கெட்டியாக அல்வா பதம் வந்தவுடன் மேலே நெய் ஊற்றி மேலும் கிளறவும். நெய் பிரிந்து வரும் வரை கிளறி பிறகு இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, அல்வாவை எடுத்து வைத்து, மேலே முந்திரி பருப்பு தூவி அலங்கரிக்கவும்.

திங்கள், 9 மார்ச், 2009

பணியாரம்



ரவை - 2கப்
தேங்காய் பால் - 1 டின்
சீனி - 11/2 கப்
முட்டை - 1
ஏலம் பொடி - சிறிதளவு

செய்முறை

ஒறு பாத்திரத்தில் ரவை போட்டு ரவையில் தேங்காய்பால் சேர்க்கவும்
3/4 மணி நேரம் ஊறவைக்கவும். அத்துடன் சீனி,நன்கு அடித்த முட்டை, ஏலம் பொடியை சேர்க்கவும்.(குறிப்பு: முட்டையை குழிப்பணியாரம் செய்ய போகும் சமயத்தில் தான் அந்த கலவையில் ஊற்ற வேண்டும்) .

பின் ஒரு குழிபணியார சட்டியில் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து குழியில் முக்கால்பகுதி ஊற்றவும் மூடிவைத்து வேக விடவும்
பின் திருப்பி போட்டு வேகவிடவும்

இப்போது குழிபணியாரம் தயார்

மீன் சம்பால்


தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கொத்தமல்லி இலை - சிறிது
காய்ந்த பட்டை மிளகாய் - 6
உப்பு

மீனை நன்கு கழுவி மிளகாய்,உப்பு போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து அரை பொறியலாக பொறித்துக் கொள்ளவும்.
பூண்டை நசுக்கி பச்சை மிளகாய்,கொத்தமல்லியை அரிந்து வைத்து கொள்ளவும்.

மீனை பொறித்த எண்ணெயிலேயே வெங்காயத்தை வதக்கவும்.

பிறகு தக்காளி,பூண்டு போட்டு வதக்கவும்.
அத்துடன் புளித்தண்ணீரை சேர்த்து நன்கு கொதித்ததும் பொறித்த மீனை போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான மீன் சம்பால் ரெடி

புதன், 4 மார்ச், 2009

Brain Teasers / Riddles - 2

1- A carpenter agrees to work on the condition that he is paid 2 units for everyday that he works, while he forfeits 3 units for everyday that he does not work. At the end of 30 days he finds that he has paid out exactly as much as he has received. How many days did he work?

2- What turns everything around, but does not move?

3- On a fine sunny day a ship was in the harbor. All of a sudden the ship began to sink. There was no storm and nothing wrong with the ship yet it sank right in front of the spectators eyes.

What caused the ship to sink?

4 - What goes around the world and stays in a corner?

5- Farmer Joe came to town with some watermelons. He sold half of them plus half a melon, and found that he had one whole melon left. How many melons did he take to town?


6- Two boxers are in a boxing match (regular boxing, not kick boxing). The fight is scheduled for 12 rounds but ends after 6 rounds, after one boxer knocks out the other boxer. Yet no man throws a punch.
How is this possible?

7- Translate the following group of letters:

YYYMEN


8-
What question can you never truely answer "yes" to?

9- The more you take the more you leave behind.
What are they?

10- My brother, the local bus driver, was telling me that recently he was driving a bus full of people and no-one got off on the way. However, at the end of the journey, there was not a single person left on the bus. How?

.

.

.

.

.

Answer :

1 - He worked on 18 days and did not work on 12 days.

2 - A Mirror

3 - The "Submarine" Captain ordered the crew to dive.

4 - A Stamp

5 - He took 3 melons to town

6- They are female boxers.

7- Three Wise Men

8- Are you sleeping?

9- Footsteps.

10 - Everyone on the bus was married and therefore not single.


Brain Teasers / Riddles - 1

Use the digits 1, 2, 3, 4, 5 and 6 once only, in this multiplication sum to make it correct.

? ?
x ?
-------
? ? ?

















Result:
5 4
x 3
----
162

இது யார் சொத்து?

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்

யானை, பசு, குரங்கு

தலைப்பில் உள்ள மூன்றும் ஒரு நாள் சீரியஸாக வாக்கு வாதத்தில் இறங்கின, யார் சிறந்தவர் என்று?...

யானை : நான் கனமான பொருட்களை தூக்கி செல்லுவேன். நான் தூக்குமளவுக்கு யாரும் தூக்க முடியாது....

பசு : நான் என் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே பால் தருகிறேன்

.

.

.

.

.

.

.

.

.

.

.

ஹேய் எதாவது சொல்லு. இது உன்னோட முறை

தெரிஞ்சுக்கோ, புரிஞ்சிக்கோ

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம்,

1000 துனபம் வரலாம்.

ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

தெரிஞ்சுகிட்டியா?


பாடம்

ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.

கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.



திங்கள், 2 மார்ச், 2009

சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்

கேழ்வரகு - அரை கிலோ
சம்பா கோதுமை - ஐம்பது கிராம்
புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம்
பாதம் - ஐம்பது கிராம்
ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம்

உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம்

செய்முறை


கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேசா கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும்.


குறிப்பு:

டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சர்க்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம்


என்னை போன்ற குட்டிப் பாப்பாக்கள் விரும்பி குடிப்பார்கள்.

Mantras for Success

The Following are the seven mantras for success :

1. Communication Skills -Most of what goes on as business in an organisation is, in fact, communication. Anything that is not communication is probably dependent on something to initiate communication or keep it going. This is why one needs to master the art of communication both verbal as well as written.

2. Influencing Abilities - This is more of a leadership trait. It includes persuading and negotiating skills. Persuasion means convincing and encouraging people to do, as against being pushy and aggressive. It is a very powerful tool, especially in conflicting situations both in your professional as well as personal life.


3. Managing Skills -In layman's words this term means getting things done. But from the career perspective it means managing things, people and of course, managing yourself, that is , your time, resources and money. To be able to achieve success one needs to prepare and train himself/ herself in the art of effective management.

4. Problem Solving -It means knowing how to recognize and define problems, implement solutions and track and evaluate results. Effective problem solving skills will help to become the backbone of any team, which in turn will help in career prospects.

5. Creative Thinking - It is said that intelligence is central to both the right and left modes of the brain. But the majority of people give more importance only to the logical approach in problem solving. What is really required is a blend of logical and lateral thinking processes together to generate new ideas and solutions, seeing things in the 'round' and having an open mind.

6. Social Skills -It means one's ability to relate to people, having insights, helping others and facilitating. Interdependence today is of greater value than independence. Thus it becomes that much more important for you to take a genuine interest in people with whom you work and spent time, emotion and money on them.

7. Managing Money-If in spite of possessing all the above mentioned skills you fail to achieve success it may be because you are poor in the number game ! You must have your figures, statistics and accounts in place. You must be shrewd in the money matters. As an old saying goes, " Money begets Money.

So – All the best and keep dreaming big.

Grape Cleanser

Grape juice makes an excellent cleanser for any skin type. Simply split one
or two large grapes, remove pips and rub the flesh over face and neck.
Rinse off with cool water.

Banana Wrinkle Fighter

Banana is wonderful as an anti-wrinkle treatment. Mash 1/4 banana until
very creamy. Spread all over face and leave for 15-20 minutes before
rinsing off with warm water followed by a dash of cold. Gently pat dry.

Egg & Olive Oil Hair Mask

Mix two whole eggs with four tablespoons of olive oil. Smooth through hair.
Wrap head with plastic wrap, and leave in hair for 10 minutes. Rinse well.

Egg & Honey Mask

Mix together 1 tablespoon honey, 1 egg yolk, 1/2 teaspoon almond oil and
1 tablespoon yogurt. Honey stimulates and smoothes, egg and almond oil
penetrate and moisturize, and yogurt refines and tightens pores.

Facial Mask

Squeeze half a lemon and mix the juice with one beaten egg white. Leave
on your face overnight or, for a quick pick-me-up, just 15 minutes. Splash
warm water on your face to rinse. It helps to removes blotches, because
the lemon works as a bleaching agent.

சில்லி சிக்கன் Fry

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கி
பெரி வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது ெநய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை:

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி , பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்க வேண்டும்.

இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி ேநரம் ஊறவிடவும். இந்த கலைவைய இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது ெநய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேக வைத்த கலவைய தனியாக ெநய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும். இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகைள வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.