சனி, 18 ஜூன், 2011

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Thanks to : http://www.vandhemadharam.com

வடைக்கதையும் வைரமுத்துவும்...!

காக்கா வடைக்கதை கவிஞர் வைரமுத்து தன் கவிதை நடையில் சொன்னால் எப்பிடியிருக்கும் ஓர் உல்டா கற்பனை,,, படித்ததில் பிடித்தது..

புழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.
எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!

விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!

நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!

“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.

இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...

“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!

கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’

நன்றி : இணையத்தில் இருந்து

திங்கள், 6 ஜூன், 2011

இஞசி - கொத்தமல்லி சாறு

தேவையானவை:

கொத்தமல்லி தழை - 1 கைபிடி அளவு
இஞ்சி - சிறிது
மிளகு தூள் - சிறிது
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சியை மிக்சியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டவும். அதனுடன் மிளகுதூள் , உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

வெயில் நாளுக்கு ஏற்ற அருமையான பாணம்.

பெண்கள் இதை தொடர்ந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சனையும் சரியாகும்.






பிரெட் சமையல்

1. பிரெட் காரப்பணியாரம்

தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம். சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

2. புலாவ் வித் பிரெட்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - 1, பிரெட் துண்டு - 2, நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் புதினாவை வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.

3.பிரெட் பாயசம்
தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, நெய்யில் வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 500 மில்லி.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.

4.பிரெட் பக்கோடா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்), வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

5. பிரெட் போண்டா

தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், பிரெட் துண்டுகள் - 10, உருளைக்கிழங்கு - 4, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

6. பிரெட் வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2, குடமிளகாய் - 1, கொத்தமல்- சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - கால் டீஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.

சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

7. பிரெட் பூரண போளி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், தேங்காய் துருவல் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.

8. பிரெட் வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, குடமிளகாய், கேரட் - தலா 1, தக்காளி, வெங்காயம் - தலா 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது. சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.

9. கல்கத்தா ஜீரா

தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!

10.பிரெட் சமோசா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், பீன்ஸ் - 10, கேரட், வெங்காயம் - தலா 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1, கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, இஞ்சித் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.

11. பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டை நான்கு துண்டுகளாக 'கட்’ செய்யவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதில் பிரெட் துண்டுகளைத் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வெங்காய சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

12. பிரெட் அல்வா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, சர்க்கரை - 100 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, சிறிது கெட்டியானதும் பிரெட் பொடியை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு மேலும் கிளறி இறக்கவும்.

பால் மற்றும் பிரெட் இரண்டும் சேர்ந்து வித்தியாசமான சுவையை உண்டாக்கும் அல்வா இது.

13.பிரெட் அடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, இட்அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தக்காளி, வெங்காயம் - தலா 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பூண்டு வாசனை பிடிக்கும் என்றால், அரைக்கும்போது இரண்டு பூண்டுப் பல் சேர்க் கலாம்.

14. பிரெட் ஸ்பிரிங் ரோல்

தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸுடன் சாப்பிட ஸ்பிரிங் ரோல்... சூப்பர் ரோல்!

15. பிரெட் வடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு புதினா சட்னி நன்றாக இருக்கும். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிரெட் தூளுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்தும் இதே முறையில் செய்யலாம்.

16. பிரெட் சூப்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, தக்காளி - 6, மிளகுத்தூள் நெய் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கோஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். கோஸ் துருவலை நெய் விட்டு வதக்கி, தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். பிரெட்டை பொடித்து சேர்க்கவும். இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சூடாக குடித்தால் 'சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

17. பிரெட் சப்பாத்தி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடிவைக்கவும். இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

18. பிரெட் குணுக்கு

தேவையானவை: பிரெட் - 10 துண்டுகள், வெங்காயம், பேபிகார்ன் - தலா 2, பச்சை மிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை உதிர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பேபிகார்ன், வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிற மாக வேக வைத்து எடுக்கவும்.

சாஸ் தொட்டு சாப்பிடலாம். வாயில் போட்டதும் 'நறுக்’கென இருக்கும் இந்தக் குணுக்கு.

19. பிரெட் கேக்

தேவையானவை: பிரெட் - 6 துண்டுகள், நெய்யில் வறுத்த மைதா மாவு - 100 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்., சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை, மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி - பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

20.பிரெட் சாலட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1, முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை - தலா 50 கிராம், எலுமிச்சம்பழம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி, கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

21. பாவ் பாஜி

தேவையானவை: பாவ் பிரெட் (பேக்கரியில் கிடைக்கும்) - 2 பாக்கெட், பீன்ஸ் - கால் கிலோ, குடமிளகாய், தக்காளி - தலா 1, கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸை நீளவாக்கில் மெல்லியதாகவும்... கேரட், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பீன்ஸ், கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து... குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் வேக வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வதக்கிய தக்காளி, குடமிளகாய், கொத்தமல்சேர்த்து நன்றாக மசித்துப் பிசையவும். பாவ் பிரெட்டை நடுவில் வெட்டி, மசித்த கலவையை உள்ளே வைத்து, சிறிது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்
.
பிரெட்டை, இந்த மசாலா கலவையைத் தொட்டும் சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.

22. பிரெட் ஜாமூன்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, சர்க்கரை கலக்காத பால் கோவா, பால் பவுடர் - தலா 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கோவா, பால் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையை, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களைப் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

பால் பவுடருக்குப் பதிலாக ஜாமூன் மிக்ஸ் சேர்த்தும் இதை செய்யலாம்.

23. பிரெட் ரெய்தா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங் காயம், தக்காளி, கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.

24, புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புதினா - ஒரு கைப்பிடி, உரித்த பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 1, வெண்ணெய் - 100 கிராம், உப்பு - சிறிதளவு, நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை: புதினாவுடன், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதில் வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் குழைத்து, பிரெட்டின் இருபுறமும் தடவவும். பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

இதற்கு சாஸ் சிறந்த காம்பினேஷன். பூண்டு, புதினா வாசனையுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

25. பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புழுங்கல் அரிசி - 150 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் - தலா 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேரட்டை துருவவும். அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் பிரெட் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை வதக்கி... உப்பு சேர்த்து, மாவில் கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை சிறு ஊத்தப் பமாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.

26, பிரெட் நெய் அப்பம்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 2 (பொடித்துக் கொள்ளவும்), அரிசி மாவு - 4 டீஸ்பூன், கோதுமை மாவு - 3 டீஸ்பூன், ரவை - 2 டீஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள் - 4, பொடித்த வெல்லம் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, பிரெட் தூள், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், வாழைப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து, தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அப்பம் தயாரிக்கும் குழியில் நெய் தடவி, சிறு கரண்டியால் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்தும் மாவைக் கரைக் கலாம்.

27. பிரெட் உப்புமா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, வெங்காயம், கேரட் - தலா 2, பச்சை மிளகாய் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் போட்டு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, உதிர்த்த பிரெட், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

விருப்பப்பட்டால் பட்டாணி, குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

28. பிரெட் பீட்ஸா

தேவையானவை: பீட்ஸா பிரெட் - 1, சீஸ் - 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, நெய் - 6 டீஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக 'கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும்.

அடை மாவிலும் அடை தட்டி இதே முறையில் அலங்கரித்து கொடுக்கலாம். அடம் பிடிக்கும் குழந்தையும் ஆர்வமாக சாப்பிடும்.


29. பிரெட் கிரேவி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி... தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும். பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.

சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.

30.பிரெட் சீஸ் பால்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.

Thanks to - அவள் விகடன்

வியாழன், 26 மே, 2011

வாழைத்தண்டு ரசம்

தேவையானவை:

வாழைத்தண்டு 1/2 அடி துண்டு ஒன்று

துவரம்பருப்பு 1/2 கப்

தக்காளி 2

பச்சைமிளகாய் 2

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு


பொடி பண்ண:

மிளகாய் வற்றல் 2

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

-------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

--------

செய்முறை:

வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக்கொண்டு சிறிது தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் துவரம்பருப்போடு (இரண்டையும் தனித்தனி அடுக்கில்) வைத்து வேகவைக்கவும்.

மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில்வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வாழைத்தண்டை அதிலிருந்த தண்ணீருடன் மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டவேண்டும்.

வெந்த துவரம்பருப்பை நன்றாக கடைந்துகொண்டு அதனுடன் வாழைத்தண்டு சாறு,தக்காளி,பச்சைமிளகாய்,அரைத்த பொடி,தேவையான உப்பு

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் கடுகு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளித்து அரிந்த கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்

செவ்வாய், 24 மே, 2011

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!

அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.


குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள். அவ்வளவுதான்!

சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.

நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!

நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.

அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.

Thanks to : www.inneram.com

திங்கள், 2 மே, 2011

ஹம்மூஸ்

இது அரபு நாட்டில் சாண்ட் விச் மற்றும் குபூசுக்கு தொட்டு சாப்பிடுவது, சட்னி மாதிரி இருக்கும்.

வெள்ளை கொண்டை கடலை - ஒரு கப்
வெள்ளை எள் வருத்தது - இரண்டு மேசை கரண்டி
பூண்டு - ஆறு பல்
ஆலிவ் ஆயில் - முன்று மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை பழ சாறு - இராண்டு தேக்கரண்டி


கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து மசிக்கவும்.
பூண்டை வேகவைத்து மசித்து கொள்ளவும். முதலில் மிக்சியில் வருத்தஎள்ளை பொடித்து கொண்டு பிறகு ,பூண்டு ,கொண்டை கடலையை மையாக அரைக்கவும்.

இப்போது ஒரு பவுளில் அதை வழித்து வைத்து அதில் ஆலிவ் ஆயில்,உப்பு, லெமென் ஜூஸ் கலந்து சாப்பிடவும்.

மனம் மகிழுங்கள் -40- கேளுங்கள் ராசாவே!


நாம் விரும்புவதை அடைய வேண்டுமானால் கேட்க வேண்டுமாம். ‘கேட்டுப் பெறு’ என்கிறார்கள்.

‘என்ன கேட்க வேண்டும்; எதைக் கேட்க வேண்டும்’ என்கிறீர்களா?

நம்மிடம் பொதுவாய் ஒரு குணம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்கக் கூச்சம். கூர்ந்து ஆராய்ந்து, கூறு போட்டு அதைத் தயக்கம், பயம் என்று விதவிதமாகவும் சொல்லலாம்.

அதே நேரத்தில் நேர் எதிர்மாறாய், எங்கெல்லாம் கேட்கக்கூடாதோ அங்கெல்லாம் கூச்சம் மறந்து போகும்!

லஞ்சம், கமிஷன், டொனேஷன், எதற்கெடுத்தாலும் இலவசம் இத்தியாதி. இதையெல்லாம் பார்த்து ‘ஆமாமாம், இந்த நாடே உருப்படாது’ என்று சலித்துக் கொள்பவர்கள் பெண் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, டௌரி, சீர், செனத்தி, கார், நகை, நட்டு, லொசுக்கு என்று கேட்க வெட்கப்படுவதில்லை.

வேடிக்கையாய் இல்லை?

கேட்டுப் பெறுதல் நம் உலக வாழ்வின் செயல்பாடுகளுக்கு, சாதனைகளுக்கு அவசியம். ஆனால் அதை முறையாய்ப் பின்பற்றாமல் போவதில் நிகழ்கிறது பிழை.

வாழ்க்கையில் நாம் வேண்டுவதெல்லாம் நடப்பதில்லை என்று பலரும் அங்கலாய்க்கிறோம்; நம்பிக்கை இழக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான உதவிகளை உரிமைகளை கேட்டுப்பெற ஏன் மறுக்கிறோம்; தயங்குகிறோம்?

"பிறருக்கு உதவுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு ஏதாவது வேண்டுமென்றால்தான் பிறரிடம் கேட்கப் பிடிக்காது" ஏன் அப்படி?

நம் மனமறிந்து தாமாய் அனைவரும் நமக்கு உதவ வேண்டும் என்றால் அது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது. கடைக்கு மளிகை வாங்கச் சென்று ஓரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தால், "ஸார் முகத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு கிலோ சர்க்கரை தேவை போலிருக்கிறது" என்று கடைக்காரர் நமக்குத் தேவையான பொருள்களைக் கட்டிக் கொடுத்துவிடுவாரா என்ன?

நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப்பெறுவதில் தப்பே இல்லை. அதற்குரிய நியாயங்கள் பல உள்ளன.

கேட்டுப்பெறுவது சுயமரியாதை மட்டுமன்று; சுயமதிப்பும் கூட. புருவம் உயர்கிறதோ? நாம் உரிமையுடன் பிறரிடம் உதவி கேட்கும்போது நம் மனதிலும் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களின் மனதிலும் பரஸ்பரம் உரிமையும் சலுகையும் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? குட்மார்னிங் சொல்லிவிட்டுக் கடந்து செல்லும் பக்கத்து வீட்டுக்காரரிடம், "பாத்ரூம் கெய்ஸர் ரெண்டு நாளா வேலை செய்யலை. எனக்குத் தெரிஞசதெல்லாம் செஞ்சு பாத்துட்டேன். புரியலை" என்று சொன்னால், ஒன்று அவருக்குத் தெரிந்த ரிப்பேர் செய்வார்; அல்லது அவருக்குத் தெரிந்த மெக்கானிக், ஃபோன் நம்பர் என்று வீட்டிற்குச்சென்று எடுத்து வந்து தருவார். அதை விடுத்து ‘அந்த ஆள் போட்டிருக்கிற சட்டை எனக்குப் பிடிக்கலே. அவரிடம் சென்று உதவி கேட்பதாவது’ என்று நினைத்தால்?

தேவையான உதவிகளை வேண்டிப் பெறுவது அதற்கு நாம் தகுதியுடையவர்களே என்ற நம்பிக்கையை உங்களது மனதில் அது ஏற்படுத்துகிறது.

கேட்டுப் பெறுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் பிறரிடம் உங்களது தேவைகளைத் தெரிவிக்காதபோது அவர்கள் அதை அறியாமல் போகக்கூடும். அல்லது தாமாகவே அறிந்திருந்தாலும் மறந்து போய் உங்களைத் தவிர்த்துவிடக் கூடும். விளைவு? உங்களது மனதில் ஏமாற்றம். உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் வெளிப்படுத்தாதபோது வயிற்றுக்குள் ஏதோ ஓர் அசௌகரியம் ஏற்பட்டுப்போய் அதன் தாக்கம் பிறகு மனதில் வந்து தங்கும்.

கேட்டுப் பெறுவது என்பது உங்களது மனதில் உள்ளதை நீங்கள் முறையுடன் வெளிப்படுத்தும் முதல் செயல். இறைவனிடம் கையேந்திக் கேட்டால்தானே பிரார்த்தனை! மனதிலுள்ளதை அறியும் இறைவனே "கேள் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போது மனிதர்களிடம் நம் மனதிலுள்ளதைக் கேட்கத்தானே வேண்டும்? உங்களின் முதலாளி, குடும்பம், நண்பர்கள் என்று யாரிடம் உங்களுக்கு என்னத் தேவையோ நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். வேண்டுமானால் "இன்னிக்குப் பூரியும் தக்காளித் தொக்கும் செய்து கொடேன்" என்று மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். பெருமையுடன் சமைத்துப் பரிமாறுவார். கோபமாய்த் திட்டு வந்து விழுந்தால் அது வேறு பிரச்சினை.

‘நீங்கள் உதவிகள் கேட்டுப் பெறும்போது உங்களுக்கு உதவுபவர் மனதில் அது ஓர் அலாதி மகிழ்வைத் தருகிறது. அதனால் கேட்காமல் இருப்பது உங்களது சுயநலம்’ என்று திட்டுகிறார் ஓர் உளவியலாளர். ‘நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; அதனால் மனம் மகிழ்கிறீர்கள். எனில் அந்த வாய்ப்பைப் பிறருக்கும் அளித்து அவர்களும் மனம் மகிழ நீங்கள் உதவ வேண்டாமா?’ என்கிறார்.

யதார்த்த உலகில் மக்கள் பிறருக்கு உதவவே விரும்புகிறார்கள். உங்களுக்குத் தேவை என்று ஒன்று ஏற்படுவது தெரிந்தால் உதவுவது அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது. நீஙகள் உங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டீர்கள், இப்பொழுது உங்களுக்குத் தோள் கொடுக்க ஆள் தேவை என்றால் ஓடிவந்து உதவவே அவர்களுக்கு விருப்பம் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலர் உதவி புரிவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படித் தாமே முன்வந்து பிறருக்கு உதவுவதால் அது அவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைப்பதாக ஆகிவிடுமோ என்ற தயக்கம் பலருக்கும் இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களைக் காணும்போது மக்களிடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒருவர் அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஸீ்ட் பிடித்திருப்பார். அப்பொழுது கூட்ட நெரிசலில் அமர இடம் இல்லாமல் நிற்கும் கர்ப்பிணியைக் கண்டால் அவரது நல்லுள்ளம் விழிப்படைந்து உடனே எழுந்து, "நீ உக்காந்துக்கோம்மா". பிரதியுபகாரமற்ற அந்த உதவி அவருக்குப் பெருமை.

மீட்டருக்குச் சூடு வைத்துக் கொதிக்கக் கொதிக்க ஓடும் ஆட்டோக்களின் முதுகில் பார்த்தால் "பிரசவத்திற்கு இலவசம்".

தொழிலோ, திருமணமோ, கார் வாங்க வேண்டுமோ, வேலை தேட வேண்டுமோ, என்ன காரியமோ - சிலர் தாங்கள் நினைத்ததை நினைத்தபடியே வெற்றிகரமாய் அடைவதைக் காணலாம். அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களுக்கு வேண்டியதை யாரிடம் எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்று அறிந்து வைத்திருப்பதே!

தேவைப்படும் உதவிகளைப் பிறரிடம் கேட்பதில் கௌரவக் குறைச்சல் இல்லை என்பதை உணர வேண்டும். இன்று பைக் ரிப்பேர் எனில் அலுவலகம் செல்ல நண்பர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்கிறோமில்லையா?

ஆனால் முக்கியமான ஒன்று! கேட்டுப் பெறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்கக் கூடாதது யாசகம், கையூட்டு, வரதட்சணை, இலவசம் போன்றவை. ‘பெண்களிடம் வயது’ என்று வால்தனமாய்க் குறும்பர் யாரேனும் பின்னூட்டம் இடலாம். எதற்கெடுத்தாலும் பிறரைத் தொணதொணத்து ஏதாவது கிடைக்குமா என்று பிறாண்டுவது என்பதெல்லாம் கேட்டுப் பெறுவதல்ல. மக்கள் அதை விரும்புவதில்லை. பிறகு உங்களைப் பார்த்தாலே ஓட்டப் பந்தயம் ஆரம்பித்து விடுவார்கள்.

மனமறிந்து தானாய் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது சொற்பமாய் யதேச்சையாய் நடக்கலாம்; எப்பொழுதுமே நடக்காது.

எனவே, தேவைகளை, உதவிகளை, உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள். ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்.’

Thanks to :www.inneram.com

சனி, 23 ஏப்ரல், 2011

மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்

இன்று எம்மை தேடி அத்தனையும் எங்களின் இருப்பிடத்துக்கே வந்து கொன்ன்டிருக்கிறது. அன்று நாம் கல்வி பெற கல்லூரிகள், நுலகங்கள்
என தேடி செல்ல வேண்டி இருந்தது. இன்று அவ்வாறு இல்லை இணையம் மூலம் அத்தனையும் உங்கள் உங்களின் இல்லத்திலே பெறமுடியும்.




அந்த வகையில் மாணவர்களுக்கு பயன்தரும்
இணைய தளங்களை பட்டியலிடுகிறேன்.

1 . http://www.textbooksonline.tn.nic.in/ இதனை
தமிழ அரசின் கல்வி அமைச்சு இதனை உருவாக்கியுள்ளது .
இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ் , அறிவியல் ,
கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,


2 . http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான
விளையாட்டுக்கள், மற்றும் நிறம்திட்டுதல்
வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன்
கற்றலை மேம்படுத்துகிறது. இந்த தளம் .
3 . http://www.coolmath4kids.com/ இந்த தளம்
குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை
விளையாட்டுடன் கற்று தருகிறது.
4 http://kids.yahoo.com/இது குழந்தைகளுக்காக
யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5 . http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது

தினமலர் நாளிதழின் கல்விக்கான படைப்பாகும்
இதிலே மாணவர்களுக்கான தகவல்கள் குவிந்து
இருக்கின்றன .

6 . http://www.educationatlas.com/படிக்கும் திறனைச்

சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து
கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,
உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து
அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல்
போன்றவற்றினை இத்தளம் சிறப்பாக கூறுகிறது.
7 .http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்து
கொள்வதற்கான தளம்.
8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்து
கொள்வதற்கான இணையம்

Thanks to :mahaa-mahan.blogspot.com

Egg சப்பாத்தி ரோல்

என்றைக்கெல்லாம் எனக்கு சீக்ரம் தூக்கம் வருதோ அன்றைக்கெல்லாம் இது தான் எங்க வீட்டு டின்னர் (இந்த சப்பாத்தி-ய மட்டும் என் கணவர்-கிட்ட இருந்து பிரிக்க முடியல. இல்லேன்னா தோசை-ய சுட்டு குடுத்துட்டு சீக்கிரம் kitchen-ஐ மூடிவிடலாம்-ன்னு ரொம்ப பீல் பண்ணுவேன்).
ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லீங்க. முட்டை பொரியல் செய்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங்குடன் பரிமாற வேண்டியது தான்.

தேவையான பொருட்கள்
  1. எண்ணெய் - 4 ஸ்பூன்
  2. கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
  3. பெரிய வெங்காயம் - 2 - பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் - 1
  5. முட்டை - 3
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. உப்பு
  8. மிளகு தூள் - 2 ஸ்பூன்
செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
  • கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.


ம்ம்ம்ம் இப்போ மெயின் மேட்டர்-ருக்கு வருவோம்.

ரோல் செய்ய:
  • சப்பாத்தி
  • லெமன் ஜூஸ்
  • பொடியாக அரிந்த வெங்காயம்
ஒவ்வொரு சப்பாத்தி நடுவிலும் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து படத்தில் இருப்பது போல் ரோல் செய்து பரிமாறவும்.

Thanks to :karaikudisamayal.blogspot.com

இயற்கை கலரிங் செய்முறை !



“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.


“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..


1. டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.


2. இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

3. அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

4. கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

5. இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

Thanks to :azhkadalkalangiyam.blogspot.com

அவசரகால முதலுதவிகள்!


திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.

மாரடைப்பு:

மாரடைப்பிற்கான அறிகுறிகள்:

நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.

இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.

கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.

படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.

முதல் உதவி சிகிச்சை:

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:

சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.

வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு:

கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.

டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.


Thanks to : Dinakaran.com

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இருட்டுக்கடை அல்வா

தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)
செய்முறை:
  • சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
  • நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
  • பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
  • கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
  • விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
  • இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.
* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது
* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.