திங்கள், 19 அக்டோபர், 2009

காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன் ,
காதல் சுகமானது ,

வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது .
அந்தி வெயில் குழைத்து ,
செய்த மருதாணி போல ,
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது ?
காதல் சுகமானது

லலலல்லலா....

சின்ன பூட்டு பாயை தாங்குமா ?
உன்னை செருமி என்மேல் தூங்குமா ?
தனிமை உயிரை வதைக்கின்றது ,
கண்ணில் தீ வைத்து போனது ஞாயமா ?
என்னை சேமித்து வை , நெஞ்சில் ஓரமா ,
கொலுசும் உன் பேர் ஜெபிக்கின்றது ,
தூண்டிலை தேடும் ஒரு மீன் போல நானே ,
துயரங்கள் கூட அட சுவையாகுது ,
இந்த வாழ்கை இன்னும் ரொம்ப ருசிக்கின்றது ,
காதல் சுகமானது ,

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா ?
நீயும் ஆனந்த பைரவி ராகமா ?
இதயம் அலைமேல் சருகானதே ,
ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்
வந்து மோதிய இருந்த மேகமே ,
தேகம் தேயும் நிலவானதே ,
காற்று மலை சேர்ந்து ,
வந்து அடித்தாலும் கூட ,
கற்சிலை போலே நெஞ்சு அசையாது ,
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய் ,
ஏன் குடை சாய்ந்தது ?
காதல் சுகமானது ,

ல ல லா ல ல ல லா ...


1 கருத்து: