ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

செட்டிநாட்டு பூண்டு குழம்பு

தேவையானவை : 1
பூண்டு - 12 பல்
சின்னவெங்காயம் - 20
தக்காளி - 1 பெரியது
கரிவேப்பிலை - 5
புளி - 1 எலுமிச்சியளவு
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்
மிளகாய்பொடி - 1 டீஸ்பூண்
உழுந்து - 1 டீஸ்பூண்
கடுகு - 1 டீஸ்பூண்
தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

தேவையானவை 2

மல்லி - 2 டேபிள்ஸ்பூண்
ஜீரகம் - 1 டீஸ்பூண்
கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண்
மிளகு - 1/4 டீஸ்பூண்
காய்ந்தமிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
எண்ணெய் - 1 டீஸ்பூண்

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

அருமையான செட்டிநாடு பூண்டுகுழம்பு ரெடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக