ஞாயிறு, 9 ஜனவரி, 2011

சட்னி - மிளகாய்ப் பொடி

தேவையான பொருட்கள்:-

வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
தோசை மிளகாய்ப் பொடி – 3 தேக்கரண்டி
(காரத்திற்கேற்ப கூடவோகுறைத்தோ சேர்த்துக்கலாம்)
உப்புதோசை மிளகாய்ப் பொடியிலேயே இருப்பதால்,
தேவையானால்சேர்த்துக் கொள்ளலாம்.
கடுகு - சிறிதளவு
எண்ணெய்தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு

செய்முறை:-

மேலே குறிப்பிட்ட வெங்காயம், தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ளவேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும்வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர்மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, தேங்காய்த் துருவல், தோசை மிளகாய்ப்பொடி, தேவையானால் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில்சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து எடுத்து அதைஅரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டவும். அவ்வளவு தான்சுவையான சட்னி தயார். இப்படி சுவையாக இருக்க தோசை மிளகாய்ப்பொடியில் சேர்த்திருக்கும் எள் மற்றும் பெருங்காயமே காரணம்.



அது சரி தோசை மிளகாய்ப் பொடி எப்படி செய்யறதுன்னு கேட்கறீங்களா?இதோ அதன் செய்முறை:-

½ டம்ளர் கடலை பருப்பு, ½ டம்ளர் உளுத்தம் பருப்பு, பெருங்காயம்,தேவைக்கேற்ப மிளகாய், எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு கைப்பிடிஎள்ளை வெறும் வாணலியில் வறுத்து உப்புடன் மிக்ஸியில் பொடித்தால்தோசை மிளகாய்ப் பொடி தயார்.

பின் குறிப்பு(1):- தோசை மிளகாய்ப் பொடிக்கு அரைக்கும் போது வெள்ளைஉளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்து சேர்த்துக் கொண்டால் தோலில் உள்ளசத்தும் சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக