செவ்வாய், 4 ஜனவரி, 2011

முள்ளங்கி உசிலி

தேவையானப் பொருட்கள்:
முள்ளங்கி - 2
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்தமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 முதல் 4 வரை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூண் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
* கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
முள்ளங்கியைத் தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஊறவைத்த கடலைப்பருப்பு, முள்ளங்கித்துண்டுகள், மிளகாய், உப்பு அக்கியவற்றை ஒன்றாகப் போட்டு வடைக்கு அரைப்பது போல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* இட்லித் தட்டில் சிறிது எண்ணைத் தடவி அதில் அரைத்த விழுதை ஒவ்வொரு தட்டிலும் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். பின்னர் இறக்கி வைத்து ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டிப் போடவும்.

* கறிவேப்பிலையும் போட்டு மீண்டும் வதக்கவும். இப்பொழுது உதிர்த்து வைத்துள்ள முள்ளங்கிப் பருப்பைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை அடிக்கடி கிளறி விட்டு பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக