ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கொத்தமல்லி சாதம்



தேவையான பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4 () 5
சீரகம் – 1 டீஸ்பூன்
புளிசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 1 கையளவு

தாளிக்க:- கடுகுசிறிதளவு
கடலைப்பருப்புஅரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்
பெருங்காயம்சிறிதளவு


செய்முறை:-


அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறிவைக்கவும். நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம்,வரமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டுமைய அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டுசூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்.பிறகு பச்சைப் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும்அரைத்த கொத்தமல்லி விழுதையும் போட்டு நன்றாக வதக்கவும். பச்சைவாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிறவிகிதத்தில் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசியை சேர்த்துகுக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை நிறுத்தி விடவும்.


பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையானகொத்தமல்லி சாதம் தயார்! இந்த கொத்தமல்லி சாதத்தினை தனியாகவோ,வெங்காயத் தயிர் பச்சடியுடனோ சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக