ஞாயிறு, 28 நவம்பர், 2010

சைவ ஈரல் வறுவல்


தே.பொருட்கள்:
தோல் பாசிப்பருப்பு(பச்சைபயிறு) - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
கிராம்பு - 2
ஏலக்காய் -2
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறு துண்டு

செய்முறை :
*
பச்சை பயிறை 3 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.இட்லி மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

*
அதனை இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*
ஆறியதும் துண்டுகள் போடவும்.அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*
கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம்+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*
வதங்கியதும் அரைத்த விழுதுன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*
பச்சை வாசனை அடங்கியதும் பச்சைபயிறு துண்டுகளை சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.

*
அசத்தலான சுவையில் இந்த வறுவல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக