புதன், 9 பிப்ரவரி, 2011

அசோகா






தேவையானவை

பாசி பருப்பு : 1 கப்

கோதுமை மாவு : 1 கப்

மைதா ; 1 /2 கப்

சர்க்கரை : 4 கப்

நெய் : 1 கப்

ஏலக்காய் தூள் : 2 ஸ்பூன்

கேசரி பவ்டர் : 1 சிட்டிகை

முந்திரி : 20 ,

ஜாதிக்காய் : சிறிது

குங்கும பூ : சிறிது


செய்முறை

பாசி பருப்பை வாசம் வரும் வரை வறுத்து குக்கர்ரில் போட்டு வேக வைத்து (3 விசில்) குழைய மசித்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்து கொள்ளவும். மைதா,கோதுமை மாவை கலந்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாசம் வரும் வரை ரோஸ்ட் ஆக வறுத்து கொள்ளவும், ஆறிய உடன் இதை ஒரு கப் தன்நீர்ரில் சிறிது கேசரி கலர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரி வருத்து அதில் வேகவைத்த பருப்பு ,சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

சர்க்கரை உருகி திரண்டு வரும் போது ஸிம்மில் வைத்து கொண்டு இப்ப மெதுவாக கரைத்து வைத்து உள்ள மைதா,கோதுமை மாவு கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும். கட்டி இல்லாமல் நன்றாக கிளறி கொண்டு இருக்கவும்.தண்ணீர் இல்லாமல் கெட்டியாக வரும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து நெய் முழுவதயும் சேர்த்து கிளறி நெய் பிரிந்து வரும் போது அடுப்பை நிறுத்தி ஜாதிக்காய், பாலில் கரைத்த குங்குமபூ, ஏலக்காய், வறுத்த திராட்சை தூவி இறக்கவும்.

சூப்பர் அசோகா அல்வா ரெடி! விசேசங்களுக்கு ஏற்ற ஸ்வீட் !

செய்து பார்த்து சுவைத்து பின்பு உங்கள் கருத்துகளை கூறுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக