ஞாயிறு, 17 மே, 2009

நம்பிக்கை

ஒரு சிறிய பெண்குழந்தையும் அவளது தந்தையும் ஒரு ஆற்றுப்பாலத்தை கடந்து கொண்டிருந்தார்கள்.

பாலத்தின் நிலையை அறிந்து சற்றே பயந்த தந்தை, "ஆத்துல தவறி விழுந்துடாம இருக்குறதுக்கு என் கைய கெட்டியா பிடிச்சுக்கோம்மா.." என்றார்.

அவள் சொன்னாள் - "இல்லப்பா... நீங்க என் கைய பிடிச்சுக்கோங்க" என்றாள்.

கொஞ்சம் குழம்பிய தந்தை "ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?" என்றார்.

"வித்தியாசம் இருக்குப்பா... பெரிய வித்தியாசம்!" என்றாள் அவள்.

" நான் உங்க கைய பிடிச்சுகிட்டு இருந்தா... ஏதாவது நடக்கும் போது ஒரு வேளை நான் உங்க கைய விட்டுறதுக்கு சான்ஸ் இருக்கு. ஆனா நீங்க என் கைய பிடிச்சுகிட்டு இருந்தா.. என்னதான் நடந்தாலும் என் கைய நீங்க விடமாட்டீங்கன்னு எனக்கு நிச்சயமா தெரியும்பா..!" என்றாள்.

எந்த ஒரு உறவிலும் நம்பிக்கை வெறும் குருட்டுத்தனமானதல்ல; மனங்களின் சந்திப்பில் இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்புதான் நம்பிக்கை.

ஆகவே நீங்கள் அன்பு செலுத்தும் உறவின் கையை இறுக பற்றிக்கொள்ளுங்கள்; அவர்கள் பற்றிக்கொள்ளட்டும் என்று காத்திருக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக