சனி, 21 மார்ச், 2009

இறைச்சி சமைக்கும் போது

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது...

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

இறைச்சி மிருதுவாக இருக்க...

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதும்

கோழித் தோலை எளிதாக உரிக்க...

கோழித் தோலை உரிக்கும்முன் சிறிதளவுத் தோலை மட்டும் முதலில் உரித்து அதனை ஒரு பேப்பரால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளவும். தோல் தானாக பேப்பருடன் ஒட்டிக்கொள்ளும்.

கோழிக்கறி சமைக்கும்போது...

கோழிக்கறியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

கறியை விரைவாக சமைக்க

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக